தமிழக அரசின் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு வழங்கிய அரிசியை குடும்ப அட்டைகளின் அடிப்படையில் 2கி வீதம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தமிழக அரசு வழங்கிய 3000 கிலோ பச்சரிசியை தமிழக அரசின் ஆணைக்கிணங்க பெரிய பள்ளிவாசலில் வைத்து ஊர் மக்களுக்கு கடந்த 06.05.2020 புதன்கிழமை முதல் 08.05.2020 வெள்ளிக்கிழமை வரை சுமார் 1120 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு அட்டைக்கு 2கிலோ வீதம் மொத்தம் 2240 கிலோ அரிசி சமூக இடைவெளி பின்பற்றி வழங்கப்பட்டது.
அடுத்த கட்டமாக மீதம் இருந்த அரிசியை இன்று 9.05.2020 சனிக்கிழமை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 10 நபர்களுக்கு 5கிலோ வீதம் மொத்தம் 50கிலோ அரிசி வழங்கப்பட்டது.மேலும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஆலிம்கள்,பிலால்கள் பெண்கள் மதரஸாவில் பணிபுரியும் ஆலிமாக்கள், மற்றும் நமது ஊர் குடிமகன்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று 61 நபர்களுக்கு டோக்கன் வழங்கி நபர் ஒருவருக்கு 10கிலோ வீதம் மொத்தம் 610கிலோ வழங்கப்பட்டது.
தமிழக அரசிடமிருந்து வந்த 3000கிலோ அரிசியில் 2900கிலோ அரிசி மட்டுமே இருந்தது. அவை அனைத்தும் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 100கிலோ அரிசி இல்லை என்பதை நமது ஊர் மக்களுக்கு இதன் மூலம் தெரிவித்து கொள்கின்றோம்.
இப்படிக்கு..
ஜமாஅத் நிர்வாகம், கோபாலப்பட்டிணம்.
தகவல்: ஜமாஅத் நிர்வாக குழு.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.