TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் ஃபித்ரா சம்பந்தமாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பசியோடு ஒரு முஸ்லிம் பெருநாள் தினத்தில் இருந்துவிடக் கூடாது.
முஸ்லிம்களிடையேயுள்ள ஆண் , பெண் , சிறியவர் , பெரியவர் , அடிமை , சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். புகாரி: 1503
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து முஸ்லிம்களும் பசியில்லாமல், மகிழ்வுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக நோன்பு பெருநாள் தர்மத்தை(ஃபித்ரா) இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இதை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ரமலானில் ஃபித்ரா தொகையினை மக்களிடம் வசூலித்து அதை முறையாக விநியோகம் செய்து வருவதை தாங்கள் அறிவீர்கள் அதைப் போன்றே இந்த வருடமும் ஃபித்ரா விநியோகம் செய்ய உங்கள் ஃபித்ரா தொகையினை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விரைந்து கொடுத்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
இந்த வருடத்தினுடைய பித்ரா தொகை ஒரு நபருக்கு ரூ.130 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் தகவலுக்கு:
ஃபித்ரா பொறுப்பாளர்கள்
1- ரசாக் ( பொருளாளர்) -9715503699
2- அபுதாஹிர் ( துணை தலைவர்) -8778115260
3- இமாம் தீன் ( துணை செயலாளர்) -6374293911
என்றும் சமுதாய மற்றும் மார்க்கப் பணியில் ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
கோபாலப்பட்டிணம் கிளை.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.