தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியால் வட மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று 12.05.2020 செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. கொரோனா தொற்று பாதிப்பு வெப்பம் அதிகரித்து வாட்டியதால் வீடுகளில் இருந்து வெளியில் வருவதை மக்கள் தவிா்த்தனா். வெப்பம் காரணமாக இரவு நேரங்களிலும் காற்றோட்டம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனா். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள், வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமலும், அவ்வப்போது அனல் காற்று வீசியதாலும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனிடையே கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நீடித்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் மின்சாரம் விட்டு விட்டு வந்தது.
மேலும் 9 மணிக்கு மேல் மழை வீட்டு லேசாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு 11 மணி முதல் வழக்கம்போல் வெயில் அடிக்க தொடங்கியது.
காலை பெய்த மழையால், வெயில் தாக்கம் இல்லாமல்,கோபாலப்பட்டிணம் குளிந்த சூழலில் காணப்பட்டது.
கோபாலபட்டிணத்தில் உள்ள நீா்நிலைகள், நீா்வரத்து ஓடைகளில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த கோடை மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.