பிளஸ் 2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.!



பிளஸ்- 2 தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.


அதில், 'மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயின்று 24-03-2020 அன்று நடைபெற்ற வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடங்களுக்கான பிளஸ்- 2 பொதுத்தேர்வினை எழுதாத மாணவர்களிடம் இருந்து தற்போது வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் படங்களுக்கான மறுத்தேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தினை 24-06-2020 பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். 

அக்கடிதத்தில் மாணவரது பெயர், தேர்வெண் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். 

அவ்வாறு பெறப்படும் விருப்பக் கடிதங்களை தேர்வெண் வாரியாக அடுக்கி 26-06-2020 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments