கோட்டைபட்டினம் அருகே நடுக்கடலில் மூன்று நாட்களாக ஐஸ் பெட்டியை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய முதியவர் மீட்பு.!



ராமேஸ்வரம் தங்கச்சிமடத்திலிருந்து கடந்த 13ந் தேதி ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர் (வயது 40), மலர், (வயது 41) கல்லூரி மாணவன் ஆனந்த் (வயது 22) ,ஜேசு (வயது 60) ஆகிய நான்கு பேரும் 2 மாதங்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். மூன்று நாட்களாகியும் கரை திரும்ப வில்லை.


இதனையடுத்து சக மீனவர்கள் தேடிப்பார்த்தும் காணாமல் போன மீனவர்களை மீட்கமுடியவில்லை. இதனால் ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் 16ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும் இரவு கரை திரும்பும் நேரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கியதால் ஆபத்தான நிலையில் ஐஸ் பெட்டியை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேசு என்ற மீனவரை கோட்டைபட்டிணம் மீனவர் அபூமன்சூர் மீட்டு முதலுதவி செய்து கோட்டைப்பட்டினம் அழைத்து வந்து கடலோர காவல்படை குழும உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

அவரை மீட்டு அதிகாரிகள் உடனடியாக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். மேலும் படகில் வந்த மூன்று பேரின் நிலைகுறித்து தகவல் இல்லாததால் உறவினர்களிடையே அச்சம் நீடித்துவருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments