கட்டுமாவடி மீனவர் வலையில் சிக்கிய 4 அடி நீளம், 8 கிலோ எடை கொண்ட அஞ்சாலை பாம்பு.!



கட்டுமாவடி மீனவர் வலையில் 4 அடி நீளமும், 8 கிலோ எடையும் கொண்ட அஞ்சாலை பாம்பு சிக்கியது.


புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியை சேர்ந்தவர்கள் சங்கரன் மகன் சிவக்குமார்(வயது 29), திருநாவுக்கரசு மகன் ரகு(22). மீனவர்களான இவர்கள் கட்டுமாவடி ராமநாதசுவாமி கோவில் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் படகில் சென்று மீன் பிடித்தபோது அவர்களுடைய வலையில் மிகப்பெரிய அரிய வகை மீன் சிக்கியது. 

வலையில் இருந்து எடுத்து பார்த்தபோது அது அதிக விஷத்தன்மை வாய்ந்த அஞ்சாலை பாம்பு என்பது தெரியவந்தது. அதன் தலைப்பகுதி பெரியதாகவும், 4 அடி நீளமும், 8 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. உடல் முழுவதும் சிறிய அளவில் புள்ளி புள்ளியாக இருந்தது. இந்த பாம்பு கூர்மையான பற்களை கொண்டது. இது கடித்தால் சதை பகுதியை பிய்த்து எடுத்து விடும். இந்த பாம்பு கடித்தால் உடனடியாக மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு செல்ல நேரிடும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். 

மேலும் ஆழம் குறைவான பகுதியில் நடமாடும் இந்த பாம்பு வகை, அதிகமாக அலை உள்ள கடல்களில் மட்டுமே காணப்படும். ஆனால் தற்போது கட்டுமாவடி கடற்கரையோர பகுதியில் அந்த பாம்பு பிடிபட்டது, மீனவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இதேபோல் சிறிய அஞ்சாலை பாம்புகளும் கரை பகுதியில் சில நேரங்களில் தென்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். இந்த பாம்பை பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து சென்றனர். பின்னர் அந்த பாம்பை கொன்று கரையோர பகுதியில் புதைத்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments