அறந்தாங்கியில் வாலிபர் வெட்டிக்கொலை - முன்விரோதம் காரணமா.?



அறந்தாங்கி எல்.என். புரத்தை சேர்ந்தவர் இடிமணி என்ற மணி(வயது 31). சுமை தூக்கும் தொழிலாளி. இவரும், அறந்தாங்கி கூத்தாடிவயலை சேர்ந்த சதீஷ்குமாரும் நேற்று இரவு எல்.என்.புரம் பிரிவு சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.


அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் திடீரென கத்தியால் மணியை கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மணி சம்பவ இடத்திலையே இறந்தார்.


இது பற்றி தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் அங்கு சென்று, மணியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மணி மீது அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே அடிதடி சம்பந்தமாக வழக்கு உள்ளது என்று போலீசார் கூறினர். இதனால் முன்விரோதம் காரணமாக அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இது குறித்து அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments