650 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை! 950 கிராமாக அதிகரிப்பு: 43 நாட்களில் சாதித்த அரசு மருத்துவமனை.!



ராஜபாளையத்தில் 650 கிராம் எடையில் பிறந்த பெண் சிசுவிற்கு 43 நாட்கள் சிறப்பு சிகிச்சை அளித்து 950 கிராமாக எடை அதிகரிக்க செய்து விருதுநகர் அரசு மருத்துவமனை சாதித்தது.


ராஜபாளையம் ஜமீன்கொல்லகொண்டானை சேர்ந்த கூலி தொழிலாளி இசைத்துரை மனைவி ரத்னா 25. இருமுறை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் ரத்தசோகை, தைராய்டு, காசநோயால் பாதிக்கப்பட்டார். மூன்றாவது முறையாக கர்ப்பமானார். 

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஏப்.,22ல் 650 கிராம் எடையில் குறைமாத பெண் குழந்தை பிறந்தது.குழந்தைகள் நல தலைமை டாக்டர் ஜவஹர் தலைமையில் டாக்டர்கள் பிரியா, சத்தியபிரகாஷ், கார்த்திகேயன் 43 நாட்கள் சிறப்பு சிகிச்சை அளித்து 950 கிராமாக எடையை அதிகரிக்க செய்தனர்.

தாய்ப்பால் குடிக்கும் அளவிற்கு சிசு முன்னேறியதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்தனர்.மருத்துவ குழுவை சுகாதார இணை இயக்குனர் மனோகரன், டீன் திருவாசகமணி, கண்காணிப்பாளர் பிரகலாதன் பாராட்டினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments