ராஜபாளையத்தில் 650 கிராம் எடையில் பிறந்த பெண் சிசுவிற்கு 43 நாட்கள் சிறப்பு சிகிச்சை அளித்து 950 கிராமாக எடை அதிகரிக்க செய்து விருதுநகர் அரசு மருத்துவமனை சாதித்தது.
ராஜபாளையம் ஜமீன்கொல்லகொண்டானை சேர்ந்த கூலி தொழிலாளி இசைத்துரை மனைவி ரத்னா 25. இருமுறை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் ரத்தசோகை, தைராய்டு, காசநோயால் பாதிக்கப்பட்டார். மூன்றாவது முறையாக கர்ப்பமானார்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஏப்.,22ல் 650 கிராம் எடையில் குறைமாத பெண் குழந்தை பிறந்தது.குழந்தைகள் நல தலைமை டாக்டர் ஜவஹர் தலைமையில் டாக்டர்கள் பிரியா, சத்தியபிரகாஷ், கார்த்திகேயன் 43 நாட்கள் சிறப்பு சிகிச்சை அளித்து 950 கிராமாக எடையை அதிகரிக்க செய்தனர்.
தாய்ப்பால் குடிக்கும் அளவிற்கு சிசு முன்னேறியதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்தனர்.மருத்துவ குழுவை சுகாதார இணை இயக்குனர் மனோகரன், டீன் திருவாசகமணி, கண்காணிப்பாளர் பிரகலாதன் பாராட்டினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.