கொரோனாவால் தமிழக காவல்துறையில் முதல் உயிர் இழப்பை சென்னை பதிவு செய்துள்ளது.
கடந்த 5-ம் தேதி காய்ச்சல் காரணமாக சென்னை மாம்பலம் காவல் நிலைய, சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி விடுதியில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
பிறகு 2 நாட்களிலேயே தொடர்ந்து காய்ச்சல் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உடனே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாலமுரளி அனுமதிக்கப்பட்டார். ஆனால் கடந்த 13-ம்தேதி உடல் நிலை மோசமானது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது சொந்த செலவில் ரூ.2.25 லட்சத்துக்கு மருந்தை வாங்கிக் கொடுத்தார். உரிய சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
அதன் பிறகு பாலமுரளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது உடல் நிலையை தனியாக மருத்துவ குழு ஒன்று கண்காணித்து வந்தது. ஆனால் நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து பாலமுரளி நேற்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.
வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த அவருக்கு மனைவி, 8-வது படிக்கும் மகள், 4-வது படிக்கும் மகன் உள்ளனர். சொந்த ஊர் வேலூர். இறந்து போன பாலமுரளியின் தந்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பாலமுரளி 2000-ம் ஆண்டு காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தவர். சென்னையில் நீலாங்கரை, கேகே நகர், எம்.கே.பி.நகர், மாம்பலம் காவல் நிலையங்களில் உள்பட பல காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர். சட்டம்-ஒழுங்கு பணியை சிறப்பாக செய்வதில் திறமை வாய்ந்தவர் என்றும் மனிநேயத்துடன் செயலாற்றுபவர் என்றும் அவருடன் பணியாற்றும் காவலர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.
சென்னை காவல்துறையில் இதுவரை கொரோனாவால் 731 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். 278 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.