முகநூலில் ஆபாச படங்கள் பகிர்ந்த மணமேல்குடி அருகே பட்டங்காடு கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் கைது.!



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்துள்ள இவர், அவ்வப்போது நண்பர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடித்தும் வந்துள்ளார்.


இவர், பாலுணர்வை தூண்டும் விதத்தில் மின்னணு முறையை பயன்படுத்தி 18 வயது நிரம்பாத சிறுமிகளை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்தும், ஆபாச படங்களை பார்த்தும், அதனை முக நூலில் பகிர்ந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாருக்கு புகார் வந்தது. 

இதுதொடர்பாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், நீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments