புதுக்கோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்தின் கழிப்பறையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று 19.06.2020 இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையிலிருந்து திரும்பியவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட மற்ற நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றாளர் எண்ணிக்கை 100ஐத் தொடவுள்ள நிலையில் ஏற்கெனவே ஒருவர் இறந்துள்ளார். தற்போது மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.