புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், பரம்பூர் கிராமம் தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று 18.06.2020 மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி பரம்பூர் ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமத்தின் முன்னேற்றத்திற்காக நிதியுதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பரம்பூர் கிராமம் 2019-20 ஆம் ஆண்டிற்கான தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் பரம்பூர் ஊராட்சி மன்றத் தலைவரை நேரில் வரவழைத்து அவரிடம் பரம்பூர் கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியின் மூலம் கிராமத்தின் வளர்ச்சிக்காக மக்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும் நல்லிணக்கத்துடன் வாழும் பரம்பூர் ஊராட்சி பொதுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) முத்தமிழ்செல்வன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலமுரளி, பரம்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.