ஜெகதாப்பட்டினத்தை தொடர்ந்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!



கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று 01.07.2020 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளங்களில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறைந்த வியாபாரிகளே மீன்கள், இறால்கள் வாங்க வந்தனர். தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் என்பதால் வியாபாரிகள் முற்றிலுமாக வருவதில்லை. 

இதனால் மீன்கள் உள்ளூரில் மிக குறைந்த விலைக்கே விற்கப்படுவதால், மீனவர்கள் நஷ்டம் அடைகின்றனர். டீசல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

இந்நிலையில் அவர்களை தொடர்ந்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களும் இன்று(புதன்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்று அறிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments