கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று 01.07.2020 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளங்களில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறைந்த வியாபாரிகளே மீன்கள், இறால்கள் வாங்க வந்தனர். தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் என்பதால் வியாபாரிகள் முற்றிலுமாக வருவதில்லை.
இதனால் மீன்கள் உள்ளூரில் மிக குறைந்த விலைக்கே விற்கப்படுவதால், மீனவர்கள் நஷ்டம் அடைகின்றனர். டீசல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் அவர்களை தொடர்ந்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களும் இன்று(புதன்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்று அறிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.