புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பிவைப்பு.!



விலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


இதனை முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டார். அவர் கூறுகையில், 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரையிலான விலையில்லா பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக வினியோக மையங்களில் இருந்து தேவையான எண்ணிக்கையில் வந்துள்ளன. 

தற்போது அந்த பாடப்புத்தகங்களை பள்ளி தொடங்குவதற்கு முன்பு நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக விலகலை கடைப்பிடித்து அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிவார்கள், என்றார். 

அப்போது மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(உயர்நிலை) கபிலன், புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளர் குருமாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments