அறந்தாங்கியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.!



ஏம்பலில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அறந்தாங்கி பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இந்திராணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, சிறுமியை படுகொலை செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். 

குற்றவாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments