கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளிவாசல்கள் மூடப்பட்டன.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று 06-07-2020 (திங்கட்கிழமை) முதல் அரசின் அறிவிப்பின் படி பஜ்ர் தொழுகையில் இருந்து பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு வருபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஜமாஅத் சார்பில் சில விதிமுறைகளை பின்பற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
- பள்ளிக்கு வருபவர்கள் கண்டிப்பாக வீட்டிலேயே உளு செய்துவிட்டு வர வேண்டும்.
- கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும்.
- அரசின் உத்தரவின் படி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- தொழுகை முடிந்தவுடன் 20 நிமிடங்களில் பள்ளிவாசல் பூட்டப்படும்.
- நோய் தொற்று பரவாமல் தடுக்க பள்ளியின் கழிவறைகள் பூட்டப்பட்டிருக்கும்.
குறிப்பு:கோபாலாப்பட்டிணத்தின் அனைத்து பள்ளிவாசலுக்கு பொருந்தும்.
தகவல்:
முஸ்லிம் ஜமாஅத்
கோபாலப்பட்டிணம், மீமிசல்
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.