தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 129 முஸ்லிம்களை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்து நீதிமன்றம் பிணை வழங்கியும் விடிவிக்காமல் உள்ள தமிழக அரசை கண்டித்தும்,
அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களை தாயகத்திற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தியும் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை கிழக்கு தமுமுக மாவட்ட தலைவர் அபு சாலிகு வெளியிடும் அறிவிப்பு: 11.07.2020
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில தலைமையகத்தின் போராட்ட அறிவிப்பினை நடைமுறை படுத்தும் விதமாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில்
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,
ஆவுடையார்கோவில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்,
ஆலங்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்,
மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகம்
ஆகிய நான்கு இடங்களிலும் 14.07.2020 செவ்வாய்க்கிழமை சரியாக 11.00 மணிக்கு போராட்டம் நடைபெறும்.
இதில் தோழமை கட்சிகள், இயக்கங்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஆகியோரையும் போராட்ட களத்திற்கு அழைத்து சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து போராட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
வெளியீடு:
மாவட்ட தலைமையகம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.