பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி மிரட்டும் வகையில் போர்ஜரி வேலைகளில் ஈடுபட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நியூஸ்18 நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
தவறைச் சுட்டிக் காட்டுவதிலும், அரசுக்கும் மக்களுக்கும் தகவல்தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவன பத்திரிகைகளும், ஊடகங்களும். ஆனால் இவற்றின் மீதான தொடர் தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஊடக நிறுவனங்கள் மீதான மாரிதாஸின் குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளன. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.
News18 நிர்வாக தலைமை நாங்கள் முன் வைத்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில் குற்றச்சாட்டுகள் சரி என்று கண்டறிந்துள்ளனர். அதன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வேலையை நடந்து வருகிறது.— Maridhas (@MaridhasAnswers) July 10, 2020
News18Tamil விவகாரம் சார்ந்து இன்று வீடியோ வெளியிடப்படும்.
குறிப்பிட்ட சித்தாந்தங்களின் கூடாரமாக ஊடக நிறுவனங்கள் மாறிவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். தமிழகத்தில் இயங்கி வரும் பிரபல ஊடக நிறுவனமான நியூஸ்18-ல் பணியாற்றி வரும் ஊழியர்கள் குறித்து அதன் தலைமையகத்திற்கு இ-மெயில் மூலம் குற்றச்சாட்டுகளை அனுப்பி வைத்துள்ளதாக வீடியோ மூலம் மாரிதாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பான வேலைகளில் தனது குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் நியூஸ்18 இணையதளத்தின் செய்தி ஆசிரியர் வினய் சாரவாகி தனக்கு இ-மெயில் அனுப்பியிருப்பதாக கூறியிருந்தார். அதில் தன்னுடைய குற்றச்சாட்டுகளை நியூஸ்18 நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக மாரிதாஸ் பரபரப்பைக் கிளப்பினார்.
இந்த விஷயத்தை நியூஸ்18 விவகாரத்தில் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் வினய் சாரவாகியின் ட்விட்டர் பதிவு அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டது. அதாவது, தான் அப்படியொரு இ-மெயிலை அனுப்பவில்லை என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் வினய் சாரவாகி யார் என்று கூட தெரியாமல், நியூஸ்18 குழுமத் தலைவரிடம் புகார் தெரிவித்ததாக மாரிதாஸ் கூறிய பொய்கள் அம்பலமாகி இருக்கின்றது.
There is a forged email in my name circulating on Twitter and WhatsApp. My office has initiated legal action in the matter.— Vinay Sarawagi (@jagora) July 10, 2020
இந்நிலையில் அவதூறு பரப்புவது, போர்ஜரியாக கடிதம் தயாரித்து வெளியிட்டது, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி மத மிரட்டல் விடுப்பது, நல்லிணக்கத்தை குலைத்து சமூகத்தில் மோதலை உருவாக்குவது, இந்துக்களை பிற மதத்தினருக்கு எதிராகத் தூண்டிவிடுவது, நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் மாரிதாஸ் மீது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் சட்ட ரீதியிலான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.