புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அண்ணாமலையான் குடியிருப்புப் பகுதியில் இருக்கிறது மாற்றுத்திறனாளி முத்தையாவின் ஓட்டுவீடு. சேலைகள்தான் சுற்றுச்சுவர்கள். கவிழ்ந்துவிடாமல் இருக்க வீட்டைச் சுற்றிலும் கம்புகள் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டு இருக்கிறது
100 நாள் வேலையும் இல்லை. மழைக்கு ஒழுகும் வீடு, ஒரு நேரச் சாப்பாடு என்ற நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டது. வேறுவழியின்றி முத்தையாவின் மகள் சங்கரி பெட்ரோல் பங்க் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனித்து வருகிறார். கொரோனாவால் அவ்வப்போது, இந்த வேலையும் கிடைக்காமல் போகவே, என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கித் தவித்து வருகின்றனர் அமுதாவிடம் பேசினோம், ``மாற்றுத்திறனாளின்னு பெரும்பாலானவங்க அவருக்கு வேலை கொடுக்க மாட்டாங்க. அவர் சம்பாதிக்கிறது சொற்ப வருமானமாக இருந்தாலும், அதை வச்சு சிக்கனமாகக் குடும்பம் நடத்திக்கிட்டு வந்தேன்.
அவர் வேலை இல்லாமல் முடங்கினதுக்கு அப்புறம்தான் எங்க குடும்பத்துக்குக் கஷ்டகாலம். கஜா புயல் வந்து வீட்டை அப்படியே சாய்த்துப் போட்டுருச்சு. விழுந்திடாம இருக்க சுற்றிலும் கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுத்து வச்சிருக்கோம்.சேலையைத்தான் வீட்டைச் சுற்றிலும் சுவர்போல சுத்தி வச்சிருக்கோம். கொஞ்ச நேரம் மழை பெய்தாலும், அன்னைக்கு ராத்திரி முழுசும் தூங்க முடியாது. வீடே சொத சொதன்னு ஆகிடும். படிக்கிற பிள்ளைகளை வச்சிக்கிட்டு ரொம்பவே கஷ்டம்.
கஜா புயலில் இருந்தே இன்னும் எங்க குடும்பம் மீள முடியாத நிலையில, இப்போ கொரோனா வந்து எங்க குடும்பத்தை மொத்தமாக நொடிச்சுப் போட்டுருச்சு. எவ்வளவு கஷ்டப்பட்டாலும், பிள்ளைகள நல்லா படிக்க வச்சு அதிகாரிகளாக ஆக்கணும் அதுதான் எங்களோட ஆசை.பெருசா கடன் எல்லாம் வாங்கி பிள்ளைகளுக்கு நாளைக்கு கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது. வேற வழியே இல்லாமல்தான் வீட்டிலேயே எந்த வேலையும் செய்யவிடாத பொம்பள பிள்ளையை பெட்ரோல் பங்க் வேலைக்கு அனுப்பினோம். பொம்பள பிள்ளை சம்பாதிக்கிற வருமானத்தை வச்சுதான் இப்போ குடும்பம் ஓடுகிறது. சில தினங்கள் இந்த வேலையும் கிடைக்காமல் போகிறது. இது எல்லாம் எத்தனை நாளுக்குன்னு தெரியலை" என்கிறார் வேதனையுடன்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.