அச்சுறுத்தி கொக்கரிக்கும் கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலரும் தங்களது உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றி வருகின்றனர்.
ஒருபுறம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்ட நிலையிலும் எப்போது இயல்பு நிலை திரும்புமோ என்ற ஏக்கம் அனைவருள்ளும் எழத்தான் செய்கிறது.
தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து ஏராளமானோர் சாப்பிட்டு வருகின்றனர்.
இதனால் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கத்தை விட வெற்றிலை, கடலை மிட்டாய் விற்பனை கூடியுள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, வெற்றிலை முத்துப்பேட்டை, மதுரை பெரியகுளம் ஆகிய ஊர்களில் இருந்து வருகிறது.
வழக்கமாக வெற்றிலையை கசாயம் காய்ச்சி குடிப்பதற்காக பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து 10 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என கருதுவதால் கடலை மிட்டாய் விற்பனை வெகுவாக கூடியுள்ளது என்றார்.
உணவியல் நிபுணர் ஒருவரும் வெற்றிலையோடு கடலை மிட்டாயை சேர்த்து 4 வயதுக்கு மேற்பட்டோர் சாப்பிடலாம், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.