புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நோய்த்தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாவட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 45 வயது பெண் மற்றும் புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த 65 வயது பெண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் இறந்துள்ளனர். தற்போது மேலும் 2 பேர் இறந்ததை தொடர்ந்து, மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.