கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் முழு ஊரடங்கு பிறப்பித்தனர். இதனால் கோட்டைப்பட்டினம் பகுதியில் அனைத்து கடைகளும் கடந்த 5 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோட்டைப்பட்டினம் வர்த்தக சங்கத்தினர் கடைகளை திறக்க அனுமதி அளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் நேற்று கோட்டைப்பட்டினத்தில் வருவாய்த்துறையினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தாசில்தார் வில்லியம் மோசஸ், டாக்டர் ராம்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வியாபாரிகள் சங்கத்தினர், விசைப்படகு சங்கத்தினர், நாட்டுப்படகு சங்கத்தினர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, வியாபாரிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.