அறந்தாங்கி அக்னிபஜார் - புதுவயல் சாலையில் MR திருமண மண்டபம் அருகில்27-06-20 அன்று முதல் 15 ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த இடத்திற்கு நிரந்தர அங்கிகாரம் வழங்குமாறு அறந்தாங்கி நகராட்சி, வட்டாச்சியர், கோட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் கடந்த 19-07-20 அன்று அதிகாலை MJTS தொழிற்சங்க ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகை அந்த இடத்தில் காணவில்லை. இது பற்றி புகார் கொடுக்க அறந்தாங்கி காவல் நிலையம் சென்ற தொழிற்சங்க நிர்வாகிகளை காவல் ஆய்வாளர் வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட சொல்லி வாங்கியுள்ளார்.
எனவே மாவட்ட நிர்வாகம், அறந்தாங்கி நகராட்சி மற்றும் காவல்துறையை கண்டித்து வரும் 27-07-20 அன்று காலை 9மணிக்கு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் குடும்பத்துடன் அக்னிபஜாரில் சாலைமறியலில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.