அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொது குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டம் (ஜல் ஜீவன் திட்டம்) வாயிலாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும் புதிதாக இணைப்பு வழங்கவும், ஏற்கனவே குடிநீர் இணைப்பு உள்ளவர்கள் அல்லது வீட்டின் அருகில் குடிநீர் இணைப்பு உள்ளவர்களுக்கும் வைப்புத்தொகையாக ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலான வைப்புத்தொகை ஊராட்சியின் மூலம் நிர்ணயம் செய்து வசூல் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வைப்புத்தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வேலை, வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் இணைப்பு வைப்புத்தொகையை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பேரிடர் காலம் முடிவடைந்த பின்னர் வசூல் செய்ய வேண்டும் என்றும், வைப்புத்தொகை வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.