மீமிசலில் ரூ.18 லட்சத்தில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் இ.ஏ.இரத்தினசபாபதிMLA!



மீமிசலில் ரூ.18 லட்சத்தில் புதிய பேருந்து நிலையத்தை இ.ஏ.இரத்தினசபாபதிMLA திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் ஊராட்சி மீமிசல் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான புதிய பேருந்து நிலையத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும், பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.3 லட்சமும் என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தை கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நேற்று 26/09/2020 சனிக்கிழமை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் தற்டபோதைய ஒன்றிய குழு உறுப்பினருமான ஜோதி, மீமிசல் பகுதி கழக நிர்வாகிகளும், ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments