பருவமழை தொடங்க உள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் உள்ள ஏரி, கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குழந்தைகள், சிறுவர்களை பெரியவர்கள் துணையின்றி நீர்நிலைகளுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. மழைக்காலங்களில் பொதுமக்கள் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டும். காய்ச்சிய பின்னரே குடிநீர் குடிக்க வேண்டும்.
மழைக்காலத்தில் நீர்வரத்து வாய்க்கால்களை கடப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவவாய்ப்பு உள்ளதால் மழைநீர் வீட்டை சுற்றி தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.