கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை.!



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவ சங்க நிர்வாகிகளுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில், மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க கூடாது. இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது. கடலுக்குள் செல்லும்போது கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. 

கூட்டத்தில் மீன்வள உதவி இயக்குனர் குமரேசன், மணமேல்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், கடல் அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments