ஆவுடையார்கோவில் அருகே பாம்பு கடித்து பெண் சாவு...



ஆவுடையார்கோவில் ஒன்றியம், திருப்பெருந்துறை ஊராட்சியை சேர்ந்த நெல்லியடி தெருவில் வசித்து வருபவர் பார்த்திபன். இவரது மனைவி கவிதா(வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரை கடித்தது.

இதில், மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இறந்த கவிதாவின் கணவர் மாற்றுத் திறனாளி ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment

0 Comments