புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டு, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணல் திருட்டு
கரூர் மாவட்டத்தில் திருட்டு போன இரு சக்கர வாகனத்தை புதுக்கோட்டையில் போலீசார் திறம்பட செயல்பட்டு மீட்டு, திருடரை பிடித்தது பாராட்டுக்குரியது. கொரோனா தடுப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணிக்கு மத்தியில் பணியாற்றும் போலீசாருக்கு மனஅழுத்தத்தை போக்க பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
விடுமுறை தேவைப்படுவோர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு பணியிலும் குறைவில்லாமல் கவனம் செலுத்துகிறோம். மாவட்டத்தில் மணல் திருட்டு, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒரே மாதத்தில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணல் திருட்டு வழக்கில் ஒருவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
குற்ற வழக்குகள்
மாவட்டத்தில் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் மூலமும், போலீஸ் நிலையங்கள் சார்பிலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.