அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48). விவசாயி. இவரது மனைவி மல்லிகா. செல்வராஜ் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்ட வயலுக்கு சென்று உள்ளார்.
அப்போது வயலுக்கு அருகே ஒரு பையில் 2 மதுபாட்டில்கள் கிடந்தது. இதை பார்த்த செல்வராஜ் அதில் இருந்த மதுவை எடுத்து குடித்து உள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டிலில் யாரும் விஷம் கலந்து வைத்துள்ளனரா? அல்லது செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது வயலுக்கு அருகே ஒரு பையில் 2 மதுபாட்டில்கள் கிடந்தது. இதை பார்த்த செல்வராஜ் அதில் இருந்த மதுவை எடுத்து குடித்து உள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டிலில் யாரும் விஷம் கலந்து வைத்துள்ளனரா? அல்லது செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.