புதுக்கோட்டையில் கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 3 பேர் இறந்தது குறித்து டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு ‘டீன்‘ கடிதம் அனுப்பினார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பவத்தன்று ஒரே நாளில் 3 நோயாளிகள் இறந்தனர். இது தொடர்பாக அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு டீன் பூவதி கடிதம் அனுப்பினார். இதுகுறித்து டீன் பூவதியிடம் கேட்ட போது கூறியதாவது:-
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளது. நோயாளிகளுக்கு எந்த குறையும் வைப்பதில்லை. சிகிச்சையில் இருந்தவர்கள் இறந்தால் அதற்கான காரணத்தை அன்றைய தினம் பணியில் இருக்கும் டாக்டர்கள், செவிலியர்களிடம் கேட்பது உண்டு. இது வழக்கமான நடைமுறை தான்.
சிகிச்சையில் இருந்தவர்களில் வயதான 3 பேர் ஒரே நாளில் இறந்தனர். இதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட துறை தலைவர்களான டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 7 பேருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளேன். இதற்கான பதிலை அவர்கள் கடிதம் மூலம் தெரிவிப்பார்கள். இது ஒரு துறைரீதியான வழக்கம். ஆனால் இதனை ஏன்? பெரிதுபடுத்தினார்கள் என்று தெரியவில்லை. மருத்துவர்கள் உள்பட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், பணியில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதனை சுட்டிக்காட்டு குறிப்பிடுவேன். சில நேரங்களில் வாய்மொழியாக விளக்கம் கேட்பது உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பவத்தன்று ஒரே நாளில் 3 நோயாளிகள் இறந்தனர். இது தொடர்பாக அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு டீன் பூவதி கடிதம் அனுப்பினார். இதுகுறித்து டீன் பூவதியிடம் கேட்ட போது கூறியதாவது:-
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளது. நோயாளிகளுக்கு எந்த குறையும் வைப்பதில்லை. சிகிச்சையில் இருந்தவர்கள் இறந்தால் அதற்கான காரணத்தை அன்றைய தினம் பணியில் இருக்கும் டாக்டர்கள், செவிலியர்களிடம் கேட்பது உண்டு. இது வழக்கமான நடைமுறை தான்.
சிகிச்சையில் இருந்தவர்களில் வயதான 3 பேர் ஒரே நாளில் இறந்தனர். இதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட துறை தலைவர்களான டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 7 பேருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளேன். இதற்கான பதிலை அவர்கள் கடிதம் மூலம் தெரிவிப்பார்கள். இது ஒரு துறைரீதியான வழக்கம். ஆனால் இதனை ஏன்? பெரிதுபடுத்தினார்கள் என்று தெரியவில்லை. மருத்துவர்கள் உள்பட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், பணியில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதனை சுட்டிக்காட்டு குறிப்பிடுவேன். சில நேரங்களில் வாய்மொழியாக விளக்கம் கேட்பது உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.