தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமலானது. பின்னர் ஒவ்வொரு மாத இறுதியிலும் கள நிலவரம் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினரிடம் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அறிவித்து வருகிறது.
அதன்படி 7-வது கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் புதிய தளர்வுகளை அறிவித்தார். இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பஸ் ஓட்டுனர்கள் போக்குவரத்தை இயக்க முன்வரவில்லை.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட தனியார் பஸ் ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்க தலைவர் புஷ்பராஜ் தெரிவித்ததாவது:- தனியார் பஸ் இயக்குவது குறித்து மாநில சங்கத்தின் மூலம் காணொலி காட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனியார் பஸ் தற்போது இயக்கவில்லை.
தற்போதைய சூழலில் தனியார் பஸ்கள் மாவட்டத்திற்குள் மட்டுமே ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. பெர்மிட்டில் உள்ளபடி வெளிமாவட்டத்திற்கு ஓட்ட அனுமதி இல்லை என்பதால் பஸ் இயக்குவதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. மேலும் 60 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் ஊரடங்கு காலத்தில் பஸ்கள் இயக்கப்படாத ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சாலை வரி செலுத்தியுள்ளோம். இதனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். எனவே தற்போது அறிவித்துள்ள கட்டுப்பாட்டின்படி தனியார்கள் பஸ்களை இயக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி 7-வது கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் புதிய தளர்வுகளை அறிவித்தார். இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பஸ் ஓட்டுனர்கள் போக்குவரத்தை இயக்க முன்வரவில்லை.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட தனியார் பஸ் ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்க தலைவர் புஷ்பராஜ் தெரிவித்ததாவது:- தனியார் பஸ் இயக்குவது குறித்து மாநில சங்கத்தின் மூலம் காணொலி காட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனியார் பஸ் தற்போது இயக்கவில்லை.
தற்போதைய சூழலில் தனியார் பஸ்கள் மாவட்டத்திற்குள் மட்டுமே ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. பெர்மிட்டில் உள்ளபடி வெளிமாவட்டத்திற்கு ஓட்ட அனுமதி இல்லை என்பதால் பஸ் இயக்குவதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. மேலும் 60 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் ஊரடங்கு காலத்தில் பஸ்கள் இயக்கப்படாத ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சாலை வரி செலுத்தியுள்ளோம். இதனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். எனவே தற்போது அறிவித்துள்ள கட்டுப்பாட்டின்படி தனியார்கள் பஸ்களை இயக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.