புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி சாதாரண கல், மண், கிராவல் மண், களிமண், சரளைமண், மணல் போன்ற சில கனிமங்களை அரசு அனுமதியின்றி வெட்டியெடுப்பது, அனுமதியின்றி வாகனங்களில் எடுத்து செல்வது குற்றமாகும்.
எனவே, அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து செல்லும்போது கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடைமுறைகள் தொடரப்படும்.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வருவாய் கோட்டாட்சியரால் மாவட்ட நீதிமன்றங்களில் தனியாக வழக்கு பதிந்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற இறுதி உத்தரவின்பேரில் மட்டுமே பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், கனிமங்கள் மற்றும் கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகியன விடுவிக்கப்படும். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் சட்டப்படி ரூ. 5 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.