புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்தால் நடவடிக்கை.! கலெக்டர் எச்சரிக்கை.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி சாதாரண கல், மண், கிராவல் மண், களிமண், சரளைமண், மணல் போன்ற சில கனிமங்களை அரசு அனுமதியின்றி வெட்டியெடுப்பது, அனுமதியின்றி வாகனங்களில் எடுத்து செல்வது குற்றமாகும்.

எனவே, அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து செல்லும்போது கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடைமுறைகள் தொடரப்படும். 

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வருவாய் கோட்டாட்சியரால் மாவட்ட நீதிமன்றங்களில் தனியாக வழக்கு பதிந்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற இறுதி உத்தரவின்பேரில் மட்டுமே பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், கனிமங்கள் மற்றும் கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகியன விடுவிக்கப்படும். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் சட்டப்படி ரூ. 5 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Post a Comment

0 Comments