‘நீட்‘ தேர்வுக்கு பயந்து அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த தேர்வை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று இரவு 9 மணி அளவில் அண்ணா சிலை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், அழகம்மாள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் தாசில்தார் முருகப்பன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு 10 மணி அளவில் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.