அறந்தாங்கியில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தபால் நிலையம் முற்றுகை.!



புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய மாநில அரசு கொண்டு வந்த  நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அறந்தாங்கி தபால் நிலையம் முற்றுகை போராட்டம் மனிதநேய மக்கள் சார்பாக நேற்று மாலை 4.30 மணியளவில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் A அபுசாலிகு தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது, ‘நீட்‘ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியபடி சென்று, தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் A.கிரீன் முகமது, தமுமுக மாவட்ட செயலாளர் அரசை ஜகுபர் அலி, மாவட்ட பொருளாளர் அஜ்மல்கான், மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ஜலீல், மாவட்ட துணைச்செயலாளர்கள் A.ஜலீல் அப்பாஸ், புதூர் நவாஸ்கான் கட்டுமாவடி பைசல், மாநில விவசாய துணைச்செயலாளர் அஜ்மல்கான்,மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் MSK சாலிகு மற்றும் SMI நிர்வாகிகள் கலந்தர் பாஷா, முகமதுகைப் அன்வர், மாவட்ட இளைஞரணி செயலாளர், N.ஜகுபர் அலி, மமக நகர செயலாளர் K.நபீஸ் அகமது, நகர பொருளாளர் பிஸ்மி ஜமால், ஆலங்குடி நகர செயலாளர் ரஹ்மான், மணமேல்குடி ஒன்றிய பொருளாளர் முகமது ராவுத்தர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அறந்தாங்கி போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.




Post a Comment

0 Comments