புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைய தொடங்கி உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோ னா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் 103 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 399 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவுக்கு தற்போது 776 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கு முன்பு சராசரியாக ஆயிரம் பேர் சிகிச்சையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓரிரு நாட்களாக வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள புள்ளிவிவரம் மூலம் இதனை அறியமுடிகிறது. ‘டிஸ்சார்ஜ்‘ அதிகரிப்பால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்தவர்கள் மற்றும் இணை நோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள் என மொத்தம் 118 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.