ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 16 ஆயிரத்து 625 எக்டேர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, மழை பெய்து வருவதால் களைகளும் வளர்ந்துள்ளது.
இந்த களையால் நெல்லுக்கு கிடைக்க கூடிய தண்ணீர் மற்றும் மண்ணிலிருந்து பயிருக்கு கிடைக்கக் கூடிய சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் நெல் மகசூல் 40 முதல் 55 சதவீதம் பாதிக்கப்படுகிறது. எனவே மானாவாரி நெல் பயிரில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம் செய்வது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
நெல் விதைத்து 3 முதல் 5 தினங்களுக்குள் களையை கட்டுப்படுத்திட வேண்டும். வயலில் ஈரம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் களைக் கொல்லியினை 50 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவியும் களைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் களைக் கொல்லி தெளித்த பின் 30-35-ம் நாளில் களை எடுக்க வேண்டும் மற்றும் எந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்த வயல்களில் கோனோ வீடர் கருவி மூலம் களையினை முழுமையாக கட்டுப்படுத்தி வேர் வளர்ச்சியினை, துரிதபடுத்தி அதிக மகசூல் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு வட்டாரவேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஆவுடையார் கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.