புதுக்கோட்டையை சுங்கசாவடி இல்லாத கோட்டையாக மாற்றக்கோரி பிரதமருக்கு புறா மூலம் தூது விடும் போராட்டம் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா வைரஸ் நோயால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த கால சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் வாகனங்கள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் தற்போது தான் வெளியே வர தொடங்கி உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தில் சிறிது கூட அக்கறை இல்லாமல் மத்திய அரசு சுங்க கட்டண வரியை உயர்த்தி உள்ளது. அதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். பல வருட காலமாக சரி செய்யாமல் இருக்கும் களமாவூர் ரயில்வே பாலத்தை உடனே சரிசெய்ய வேண்டும் இதை நிறைவேற்றாத பட்சத்தில் விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இழுத்து மூடுவோம் என்ற அறிவிப்பினை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இன்று புறாக்கள் மூலம் தூது அனுப்பும் போராட்டத்தை அவர்கள் நடத்தினார்.
போராட்டத்தில் கலந்து கொண்டோர் 'என் ரோடு, என் உரிமை; டோல் தர முடியாது போடா' என்ற வாசகங்கள் பொறித்த பனியன் அணிந்திருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இந்த போராட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.