மணமேல்குடியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்...



மணமேல்குடியில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு  வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மணமேல்குடி வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று மணமேல்குடி கடைவீதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, முககவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முககவசம் அனைவரும் அணியவேண்டும் என வலியுறுத்தினர்.


Post a Comment

0 Comments