ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு ஜெபமாலை பிச்சை ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு சுந்தர்ராஜன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சிக்குட்பட்ட நெட்டியேந்தல் கிராமத்தில் உள்ள புது ஏந்தல் ஏரியை குடி மராமத்து வேலையை ஆயக்கட்டு தாரர்களுக்கு கொடுக்காமல், ஒப்பந்ததாரர்களுக்கு வேலையை கொடுத்து வேலையை சரிவர செய்யவில்லை என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.