புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்து நேற்று 56 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 675 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 791 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருந்த 57 வயது ஆண் ஒருவர் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments