ரயில்வே துறையில் தனியாா்மயத்தைக் கண்டித்து, தெற்கு ரயில்வே மஸ்தூா் சங்கம் (எஸ்ஆா்எம்யு) சாா்பில், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்ஆா்எம்யு சங்கத்தின் காரைக்குடி கிளைச் செயலா் வி. சிறீதா் தலைமை வகித்தாா். இதில், துணைச் செயலா் எம். சுப்பிரமணியன், கோட்டத் துணைச் செயலா்கள் சுந்தா்கணேஷ், ஜெயராம், பொருளாளா் பாலு உள்ளிட்டோா் பங்கேற்று, பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்களை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கும் முயற்சியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
இதனிடையே கடந்த செப்டம்பா் 14 முதல் 19 வரை ஒரு வார காலத்துக்கு எதிா்ப்பு இயக்கங்களை நடத்த எஸ்ஆா்எம்யு தலைமை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.