ஆவுடையார்கோவிலில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக மத்திய அரசை கண்டித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பில் நீட்டுக்கு எதிராக பதாகையேந்தி அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மனோகரன் (எ) பிரபு தலைமை தாங்கினார். அறந்தாங்கி தொகுதி தலைவர் முகமது இஃப்ராகிம், தொகுதி செயலாளர் வேங்கை பழனி, தொகுதி இணை செயலாளர் பரத், ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய பொருளாளர் இராஜசிங்கம், இளையர் பாசறை செயலாளர் சிவராமன், மாணவர் பாசறை செயலாளர் எட்வின் பிரான்சிஸ், மாணவர் பாசறை இணை செயலாளர் சீனிவாசன், சுற்றுசூழல் பாசறை செயலாளர் ஜோசப் மணிமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.