அறந்தாங்கியில், ஆழ்குழாய் கிணறு அமைக்காமலேயே அமைத்ததாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஊர்வணி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தி வயல், பாக்குடி ஆகிய பகுதிகளில் 2016-17-ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்படாத நேரத்தில் 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்காமலேயே இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைத்ததாக கூறி ரூ.9 லட்சம் கணக்கு காட்டி மோசடி நடைபெற்று உள்ளதாகவும், இந்த தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதேபோல, பல்வேறு இடங்களில் மோசடி நடைபெற்று இருக்கலாம். இந்த மோசடி குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த தகவல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.