மானிய விலை டீசலை அதிகமாக வழங்க வேண்டும் என்று ஜெகதாப்பட்டினம்-கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





மானிய விலை டீசல்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் அரசு கொடுக்கும் மானிய விலை டீசலை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அந்த டீசல் போதுமானதாக இல்லை. இதனால் தனியார் டீசல் விற்பனை நிலையங்களில் அதிக விலை கொடுத்து டீசல் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதிக விலை கொடுத்து டீசல் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதிகமாக...

அப்படியே டீசல் வாங்கி பயன்படுத்தினாலும் கடலில் போதுமான அளவுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மானிய விலை டீசலை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Post a Comment

0 Comments