TNTJ கோபாலப்பட்டிணம் கிளை மாணவரணி நடத்தும் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்கும் முகாம்.!



TNTJ கோபாலப்பட்டினம் கிளை மாணவரணி சார்பில் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்கும் முகாம் வருகிற 23.09.2020 புதன்கிழமை நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் 23.09.2020 புதன்கிழமை காலை 9.30 முதல் மதியம் 1.00 மணி வரை தவ்ஹீத் பள்ளிவாசலில் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற உள்ளது.அதுசமயம் கோபாலப்பட்டிணம் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிக்கும் தகுதி பெற்ற மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2020-2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு

 (சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)

'Pre-Matric' உதவித்தொகை

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 

 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .5000 

ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள்  எடுத்திருக்க வேண்டும்.

  'Post Matric' உதவித்தொகை

11 மற்றும் 12-வது வகுப்பு - வருடத்திற்கு ரூ .6000 

இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்கு ரூ .6000 முதல் 12000 

ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

  'Merit Cum Means' உதவித்தொகை
 
தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்கு ரூ .25000 / 30000

ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்

முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
  
தேவையான ஆவணங்கள்:
 
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை 
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.மத சான்றிதழின் சுய அறிவிப்பு(Self Declaration)
7.வங்கி புத்தகத்தின் (மாணவர் பெயரில்) நகல் IFSC எண்ணுடன்.

மேலும் சந்தேககளுக்கு: 
97155 03699, 80567 05792, 95972 70801

என்றும் சமுதாய மற்றும் மார்க்கப் பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கோபாலப்பட்டிணம் கிளை மாணவரணி


Post a Comment

0 Comments