வீட்டில் தொட்டில் கட்டி விளையாடியபோது கழுத்தில் சேலை இறுக்கியதால் 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி. ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பாலாஜி (வயது 11). இவன், 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை ரகுபதி, தனது மனைவியுடன் கடைக்கு சென்று விட்டார்.
வீட்டில் பாலாஜி மட்டும் தனியாக இருந்தான். இதற்கிடையில் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பாலாஜி தொட்டிலுக்கு கட்டிய சேலை கழுத்தை இறுக்கியதால் மயங்கிய நிலையில் தொங்கியபடி கிடந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாலாஜியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெற்றோர், கடைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் தனியாக இருந்த பாலாஜி, சேலையால தொட்டில் கட்டி விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டிலுக்கு கட்டிய சேலை அவரது கழுத்தை இறுக்கியதால் பாலாஜி பரிதாபமாக இறந்தது தெரிந்தது.
இதுபற்றி ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.