புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை துணை தாசில்தார் செந்தில்குமார், மணமேல்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், வட்ட வழங்கல் அலுவலர் ஹென்றி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் கவியரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோட்டைப்பட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்த சேக்முகம்மது என்பவர் வீட்டில் சோதனை நடத்தியபோது, மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் சேக் முகம்மது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். முதல் கட்ட விசாரணையில் வெளியூர்களுக்கு கடத்தி செல்வதற்காக அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
பின்னர் அங்கிருந்த 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மணமேல்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.