வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி மழை மற்றும் வெள்ள பாதிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாதிரி ஒத்திகைப் பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.வே.சரவணன் அவர்கள் முன்னிலையில் நேற்று (24.09.2020) நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பின் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியின் போது புயல், வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இப்பயிற்சியில் மழை மற்றும் பேரிடர் காலங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள், தாழ்வான பகுதிகளில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை கயிறுகள் கொண்டும், ரப்பர் படகுகள் மூலம் மீட்பதும், சாலைகள் மற்றும் குடியிருப்பு வீடுகளில் சாய்ந்த மரங்களை மின்ரம்பங்கள் மூலம் அறுத்து மீட்பு பணிகள் செய்வது மேலும் மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு மின் அதிர்ச்சியில் மயக்கமுற்ற நபருக்கு ஊPசு மூலம் முதலுதவி செய்து காப்பாற்றுவது, புகை சூழ்ந்த இடங்களில் மயக்கமுற்ற நபர்களை காப்பாற்றுவது போன்ற பயிற்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.வே.சரவணன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமதி.பானுபிரியா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.