அறந்தாங்கி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்.!



அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைகாக 70 படுக்கை வசதிகள் கொண்டு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர் வசதியுடன் 6 படுக்கை வசதிகள் உள்ளது. தொற்று உள்ள நபர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகாத வண்ணம் இருப்பதற்காக மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மூலம் மனநல ஆலோசனைகளும் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. 

மேலும் நாளிதழ்கள், தொலைக்காட்சி, கேரம், செஸ் போன்ற விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டு யோகா, பிசியோதெரபி வழங்கி புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் பகுதியை நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மரியலூயிஸ் பெக்கி கோமஸ் ஆய்வு செய்து சிகிச்சை வழங்கப்படும் முறை பற்றி மருத்துவமணை தலைமை மருத்துவர் சேகரிடம் கேட்டறிந்தார். 

நேற்று வரைக்கு அறந்தாங்கியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 544 பேருக்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். இதில் 87 பேருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்த உள்ள உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments